டிசம்பர் 01, 2025

சின்னச் சுருளி அருவியில் குளிக்கத்தடை


சின்னச் சுருளி அருவியில் குளிக்கத்தடை. 


கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் அருவிக்குச் செல்லும் பாதை மிகுதியாகச் சேதம் அடைந்துள்ளது. அதனால் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

 மேகமலையிலிருந்து கீழே விழுந்து மலையின் அடிவாரத்தில் குளிர்ந்த, மின்னும் நீர் குளம் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. தேனியில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில், கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள சின்ன சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
 தேனியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்க்க ஒரு அழகான மற்றும் அமைதியான இடமாகும்.

ஆகஸ்ட் 05, 2025

நிலவெனும் தூதுவன் - புதுக்கவிதை.

நிலவெனும் தூதுவன்  - புதுக்கவிதை.

நீல வான வீதியில் 
மிதந்து செல்லும் வெண்ணிலவே… நீ

கடந்து செல்லும் பாதையில் …
கன்னி என் தேவியின் 
காதல் ஓசை கேட்குதா…? 

மேகத்தைத் தூது விட்ட 
மேதைகளின் பாதையில் 
தூது நானும் தொடுத்தேனே…! 

விழிக்குள் ஒளியாய் 
இதயத்ததுள் துடிப்பாய் 
இருந்த நீஏன் தூரமானாய்..!

என்னில் நீயும் 
உன்னில் நானும் 
செம்மண்ணில் மழையாய்… 
கலந்தது பொய்யோ…?

காதல் கனவே!
கனியின் ரசமே! 
காலம் கணித்து 
கரங்கள் கோர்த்து 
பந்தம்  உணரும் 
தருணத்தில் 
பூமி யாவுமே 
வாழ்த்தி பாடுமே! 

நீல வான வீதியில் 
மிதந்து செல்லும் வெண்ணிலவே…

விரைந்து சென்றே சொல்லாயோ?
விருப்பம் கூறி வாராயோ..!
          
கவிஞர்:
முனைவர் மா.தமிழ்ச்செல்வி
விருதுநகர்

மார்ச் 24, 2025

பெரிய அருவி நீர்த்தேக்கம் மலை வலம் காணல் - பயண அனுபவம்

*கேசம்பட்டி மலை வலம் காணல்*

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கேசம்பட்டி பெரிய அருவி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளை  மலை வளம் காணச் சென்றேன். இப்பயணம் மனதிற்குப் பெரும் புத்துணர்ச்சியைத் தந்தது.


"ஆவாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?" - பழமொழி. காணுமிடம் எல்லாம் ஆவாரைச் செடியின் பொன் மலர்கள் பூத்துக் குலுங்கி வரவேற்றன.



நாள்: 23.03.2025
https://goo.gl/maps/AyxDk3VySvDRkzsT8


நவம்பர் 24, 2024

பராரி - திரைப்பட விமர்சனம்

பராரி

இந்தப் படத்தை எடுத்ததற்காக ராஜீ முருகனைக் கட்டி அணைத்து முத்தமிடத் தோன்றுகிறது. வாழ்க நீர் எம்மான் செவ்வணக்கம் என் தோழரே! 
நேரில் சந்திக்கும் போது இப்படி ஒரு படம் தந்தமைக்காகக் காலில் கூட விழுவேன். (வசனங்களுக்காக)
ஒரு சமூகத்தின் அறிவுக் கண்ணைத் திறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் செய்து இருக்கிறார் என் அன்புத் தோழர் ராஜு முருகன். 
ஏற்கனவே joker வேற லெவல்!
PARARI அதைவிட வேற லெவல்.

ஜோக்கர்+ பரியேறும் பெருமாள்+ நெஞ்சுக்கு நீதி+ அசுரன்+ விடுதலை + வாழை+ மாமன்னன்+ ரயில்+கூழாங்கல்+ நந்தன் = பாராரி  என்று வைத்துக் கொள்ளலாம். (இது என் கருத்து மட்டுமே. )

காதலர்களை அம்மணமாக்கிப் பார்க்கும் இந்தச் சாதியக் கொடூர சமூகத்தை சுட்டிக்காட்டி, உண்மையில் எதை அம்மணம் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று நெத்திப் பொட்டில் அடித்தது போல கதை சொல்லியிருக்கிறார்.

இந்தச் சமூகச் சூழலுக்குப் பயந்து போடப்படும் வாசகம். " இப்படத்தில் வரும் சம்பவங்கள் காட்சிகள் யாரையும் குறிப்பன அல்ல" என்று. ஆனால் உண்மையில் " இப்படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்தும் நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகள். 

பாராரிகளாய் ஆக்கப் பட்ட ஒவ்வொரு  குடிமகனும் பார்க்க வேண்டிய படம். மன்னிக்கவும் பாடம். 600 பக்க நாவலை 3மணி நேரப் படமக்கியது போல இருந்தது. தொடங்கியதில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பு. Climax வசனங்கள் தமிழ் முற்போக்குச் சினிமாவின்  உச்சம்!

ஆகஸ்ட் 08, 2024

138 வருடங்கள் கடந்த மாமதுரைச் சின்னம்.

#மாமதுரைப் போற்றுதும்!
#மாமதுரைப் போற்றுதும்!

138 வருடங்கள் கடந்த பின்னும் இன்றும் கம்பீரமாய் நிற்கும் #மதுரை ஏவி பாலத்தில் ஒரு மாலை நேர உலா.

#கோரிப்பாளையம்  முதல் யானைக்கல் வரை மதுரையின் வடகரையையும் தென்கரையையும் இணைக்கும் நூற்றாண்டு கண்ட பாலம்.

"1857 போருக்குப் பிறகு #பிரிட்டிஷ் ஆட்சியர் #ஆல்பர்ட் விக்டரால் இந்தப் பாலம் மதுரையில் கட்டப்பட்டது, அப்போது அவர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பிரிட்டிஷ் குடியேற்றங்களை எதிர்காலத்தில் கலகங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பிற்காக வடக்குக் கரைக்கு மாற்ற முடிவு செய்தனர்.  16 வளைவு தூண் பாலத்தின் கட்டுமானம் 1884 இல் தொடங்கியது மற்றும் பாலம் டிசம்பர் 8, 1886 இல் திறக்கப்பட்டது."
(தகவல்: Vivanesh Parthiban | TNN | Dec 9, 2022, 08:42 IST, டைம்ஸ் ஆப் இந்தியா)

சில சுவாரசியங்கள்: 

#இந்தப் பாலம் திறக்கப்படும் பொழுது மகாகவி பாரதியாருக்கு வயது 4.

#மதுரை அமெரிக்கன் கல்லூரி திறக்கப்பட்டு 5 ஆண்டுகள்.

#பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மதுரைக்கு வந்து 85 ஆண்டுகள் ஆகியிருந்தன.

#பிரிட்டிஷ் லெப்டிநென்ட் பி.எஸ். வார்டு அவர்கள்  கொடைக்கானலைக் கண்டறிந்து 65 வருடங்கள் ஆகியிருந்தன.

கீழ்க்காணும் பாலத்தில் உள்ள கல்வெட்டில் உள்ள பெயர். இப்பாலத்தைக் கட்டிய இந்திய வைஸ்ராய்.

Lord Dufferin (1826–1902) was the Governor-General and Viceroy of India (1884-1888).

இப்படிக்கு,
மதுரை செல்லூர் உபாத்தியாயர் டாக்டர் ச.தமிழரசன்.
நாள்: 08.08.2024
நேரம்: மாலை 6 மணி
இடம்: மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் அடியில் உள்ள சாலை.

#மதுரை 
#madurai360 
#மாமதுரை
#tamilnadutourism