தமிழ்க்கூடல் சிறப்புரை
மதுரை மாவட்டம் சிலைமான் அருகில் சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10.01.2024 புதன்கிழமை அன்று தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஜவஹர்லால்நேரு தலைமை தாங்கினார். திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் சு.முத்தையா தமிழரின் அறநெறிச் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
வரலாற்றுத்துறை ஆசிரியர் திரு.ரவி நன்றி கூறினார். தமிழாசிரியர் காயத்ரிதேவி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக