ஜூன் 15, 2020

புரட்சி வித்து பாரதி!

புரட்சி வித்து பாரதி! - புதுக்கவிதை



​இருபதாம் நூற்றாண்டில்
​நீ அதிசயமானவன்

​உனக்குப் பசியெடுத்த போதும் தமிழுக்குச் சோறு ஊட்டினாய்!

​தேசத்தின் தாகத்திற்கு - உன் செந்நீரையே தண்ணீராக்கினாய்!
​​மனிதனையே மனிதன் நேசிக்காத இந்த அரக்க நூற்றாண்டில் -நீ மிருகங்களும் மலைகளையும் கூட உன் ஜாதி என்றாய் கூட்டமைன்றாய்.!
​சமையலறைச் சமாதியில் புதைந்திருந்த பெண்களை மீண்டும் உயர்த்தெழுப்பியது உன் உரமிக்க கவிதைகளே!
​புரட்சிப் பயிரை விளைவிக்க
​ உம் பேனாக்கள் மூலம்
​ கவி வித்துக்களைத் தூவிய மகாகவியே
​சாதி, மதம், இனம் போன்ற
​​ரத்தப் பசியுள்ள
​ராட்சதப் பலிவாள்களை
​இதயத்திலிருந்து எடுத்து
​மனிதம் என்னும் சக்தியின் பாதங்களில் வைக்கச் சொன்னாய் நீயே!

​பாரதி நீர் 
​விதைத்த விதையால்
​​நாங்கள் நிழல்களின் சொர்கங்களை விட
​நிஜங்களின் நரகத்தையே நேசித்துப் பூசிப்பவர்களானோம்...

​புதிய உலகை உருவாக்க
​எங்கள் மூச்சுக்காற்றே புயலாய் உருவெடுக்கும்!

​எருவாக எலும்புக் கூட
​வளரும்  சந்ததிக்கு
​வளர்ந்துவிடு என்றும்
​உன் சமுதாயத்தில் ஒரு புரட்சி பூகம்பத்தைப் பிரசவிக்க
​ நீ மடியலாம்...
​இனியொரு விதி செய்வோம் - அதை எந்நாளும் காப்போம் தனியொருவனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
​வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
​பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்  விழிப்பெற்றுப் பதவி கொள்வார்
​​எனும் கவி முரசுகளை முழங்கிய கவியே! -
​பாரதி
​இப்போது மட்டுமல்ல எப்போதும் குரலுயர்த்திக் கூறுவோம்
​இந்த நூற்றாண்டில் நீ அதிசயமானவன் என்று!

​உன் ஒருவனின் வருகையால் .

​ஒரு நூற்றாண்டே கழுவப்பட்டுள்ளது!


--------------------

​ரட்சியா குபேந்திரன், 

​இளங்கலை ஆங்கில மாணவர்
kubendranmallika@gmail.com​


தமிழறிவு வாசகராக இணைய:

https://t.me/thamizharivu


Follow by Email 

http://feeds.feedburner.com/Thamizharivu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக