கருப்பு வைரம் - புதுக்கவிதை
உம் பரந்த உள்ளம் புண்ணியம் செய்ய...
உம் வெள்ளை சட்டை உண்மையைச் சொல்ல...
உம் அரட்டைப்பேச்சு திண்மையை அளிக்க...
உம் கண் கண்ணாடி கருத்துக்கள் கூற...
உம் கடின உழைப்பு பொறுப்புகள் செய்ய...
உம் முறுக்கு மீசையுடன் கூடிய கம்பீர நடை சிங்கத்தை விஞ்சியது!..
மொத்தத்தில் கதாநாயகராக தோன்றும் உம்மை...
என்றென்றும் என் மகிழ்ந்த நெஞ்சத்தால் மலர்ந்த புன்சிரிப்புடன் அழைக்கிறேன் அப்பா என்று!....
ஜ.சுவேதா
இளங்கலை இரண்டாம் ஆண்டு கணிதவியல்
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக