அரண்
"""""""""""""""
தாய்மைதான் அன்பிற்கு அரணாகும்
தாய்மொழியே இனத்திற்கு
. அரணாகும்;
ஆய்வுரைதான் அறிவிற்கு அரணாகும்;
ஆண்மையே வீரத்தின் அரணாகும்;
தூய்மைதான் நலத்திற்கு அரணாகும்;
தொன்மையே மரபுக்கு அரணாகும்;
வாய்மைத்தான் வாழ்விற்கு
அரணாகும்;
வணக்கம்தான் பண்பிற்கு
அரணாகும்! (1).
பெண்மைத்தான் கற்பிற்கு அரணாகும்;
பேரொளியே பகலிற்கு அரணாகும்;
தண்ணிலவே இரவிற்கு அரணாகும்;
தளிர்மரமே நிழலுக்கு அரணாகும்;
பண்ணிசைதான் பாவிற்கு அரணாகும்;
பாவைக்கோ எழில்தானே அரணாகும்;
மண்வளமோ விளைச்சலுக்கு
அரணாகும்;
மனிதநேயம் உலகிற்கு அரணாகும்! (2).
கொடைவளமோ அருளிற்கு
அரணாகும்;
கொள்கைநெறி அரசிற்கு அரணாகும்;
படைவளமோ நாட்டிற்கு அரணாகும்;
பகுத்தறிவு உறவிற்கு அரணாகும்;
உடல்நலமோ உயிருக்கு அரணாகும்;
உடையழகோ மானத்தின் அரணாகும்;
சுடர்தமிழ்க்கு "ழ"கரமோ அரணாகும்;
உலகிற்கே குறள்வழியே அரணாகும்!(3
இப்படிக்கு
கெங்கை பாலதா
சின்னகலையம்புத்தூர்.
முகவரி:-'-
கெங்கை பாலதா
பெத்தன்யா ஜோதிட நிலையம்,
R.G.நகர்,
சின்னகலையம்புத்தூர் :-624 615.
பழனி(வழி).
அலைபேசி: 98940 71974.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக