மார்ச் 05, 2020

அடையாளம் ? - புதுக்கவிதை.

அடையாளம் ? - புதுக்கவிதை.

​​தொலைத்தல்
​தொலைதல்
​அடையாளத்தை

​நாம் விரும்பும்
​மனத்திற்காக

​நம்மை விரும்பும்
​மனிதற்காக

​சமூகத்துடன் ஒத்து போக
​அல்லது
​சிறந்த சமூக பிரஜ்ஜையாக
​காட்டி கொள்ள

​குடும்பத்திற்காக
​குழந்தைக்காக

​பிழைக்க வேண்டி
​அல்லது
​பிழைப்பு நடத்த

​நல்ல மனம் என்ற போதைக்காக
​கெட்டவன் என்கிற புதிய பாதைக்காக

​உணவு வேண்டி
​உடல் வேண்டி
​அன்பு வேண்டி
​கருணை வேண்டி
​பணம் வேண்டி
​குணம் தாண்டி

​யாருக்காகவோ
​எதற்காகவோ
​எதன் பொருட்டோ

​தொடர்ந்து
​தொலைக்கின்றோம்
​சுய அடையாளத்தை

​எவர் எவரோ
​கூறும் கருத்ததனை
​சுமந்து திரிகிறோம்

​அடையாளம்
​தொலைத்து
​அடையாளம் தேடும்
​அபூர்வ உயிர் மனிதனே?


​முனைவர் பா. சத்யா தேவி
மதுரை.
bsathya2217@gmail.com
9597514564


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக