ஏந்திழை - புதுக்கவிதை
கவிஞர் அருணாச்சலம்
Dr. N. Arunachalam
590.பாலாஜி கார்டன்
அரியக்குடி 630202
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம்
9442608575
(ஏந்திழை =அணிகலன் )
சாயத்தின்
நிஜம்
தெரிய வாய்ப்பில்லை.
பிம்பதில்
அழகாய்
காட்டிக் கொள்கிறேன்.
கண்ணாடிகளில்
பொய்
இல்லை.
கலவைகள்
வெவ்வேறு ஆனாலும்
நிறங்களை மாற்ற முடியவில்லை.
பாத்திரங்களுக்கு
ஏற்றக்
கதை எழுதி கொண்டிருக்கிறேன்.
மேடைகளில்
நிழலின்
கூத்து .
ஒப்பனை இல்லாமல்
நான்...
எனக்கே என்னைத் தெரியவில்லை.
நீங்களும்
அப்படியே வாருங்கள்
சாயம் ஒட்டாமல்
அணைத்துக்கொள்வோம்!
#வழிப்போக்கன்அருணா
#ArunachalamNarayana
Dr. N. Arunachalam
590.பாலாஜி கார்டன்
அரியக்குடி 630202
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம்
9442608575
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக