டிசம்பர் 17, 2019

நேசித்து வாழ் - பாகனூர்ச்செல்வன்

பாகனூர்ச்செல்வன் 
உதவிப்பேராசிரியர்
சோழவந்தான்
மதுரை மாவட்டம்.


​1.வேண்டாம் எனவீ தியோரத் தெறிந்த 
​​விதைகூட வீரிய மாகித் தலைமுறை 
​​தோறும் உதவும் தரணியில் தாய்க்குச் 
​​சிறிதேனும் நன்றியோடு வாழ்.
​2.மாநகர் எங்கும்பா லித்தீன் அகப்பட்ட 
​​நஞ்சுணவு நாறிக் கிடந்த பொழுதினும் 
​​சீச்சீ எனப்புறந் தள்ளி வளம்சேர் 
​​இயற்கை மனிதனாய் வாழ். 
​3. தன்னை வெறுத்தார்க்கும் தன்னுடல் சாறென 
​​தன்னையே உண்ண வழங்கி உணர்வை 
​​அருளி உயிர்தந்து என்றென்றும் காக்கும் 
​​முருங்கை கருத்தராய் நேசி. 
​4.ஒருகைப் பிடிச்சோறு உண்பதிலும் இன்று 
​​ஒருபத்து சாதி யுழைப்பென்று சத்துணவு 
​​சாதிவெறி என்றும் தொலைத்து தலைமுறை 
​​ஆதியை எண்ணி நேசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக