டிசம்பர் 12, 2019

தீக்குள் விரல் வைத்துத் தித்தித்தான் - மரபுக்கவிதை.


தீக்குள் விரல்வைத்துத் தித்தித்தான் தீத்தன்னைத் 
தாக்குமென் றெண்ணா திருந்தான் - நிலைத்திருந்து 
பாக்களைப் பூக்கவி டான்திருந்தான் என்றோவத் 
தீக்கனல் தின்றதுட லை. 

பாவை வடித்தான் பசியால் துடித்தாளப் 
பாவை விழிநீர் வடித்தாள் - குழந்தையப் 
பாவை யழைத்திட நாவறண்டு போனதப் 
பாவை திடுவாரென் றோ?

    - மதுரை அச்சகனார் மகன் ரோசாமுத்தையன்
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
திண்டுக்கல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக